🔴ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று பிணைப் பணம் செலுத்திய வேட்பாளர்கள் விபரம் - sri lankan tamil news today


ஜனாதிபதித் தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்ததையடுத்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நால்வர் பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தரதன ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாகவும், அபிநவ நிவஹால் பெரமுன சார்பில் ஓஷத லக்மால் அனில் ஹேரத் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பில் ஏ.எஸ்.பி லியனகே ஆகியோர் வைப்புத் தொகையை தேர்தல்கள் பொதுச் செயலகத்தின் கணக்குப் பிரிவில் வைப்பிலிட்டனர்.


இதன்படி இன்றைய இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிணைப் பணத்தை நால்வர் வைப்பிலிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.




sri lankan tamil news today

No comments:

Post a Comment