🔴பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

 கல்விப் பொதுத் தராதர உயர்தரம்/சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிக்கான  கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உபகுழுவின் பரிந்துரையின் பிரகாரம், கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சுப் பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, விடைத்தாள்களை சரிபார்க்கும் ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்பட உள்ளது

No comments:

Post a Comment