🔴பாரிய அளவிலான டியூஷன்கள் உட்பட 14 துறைகளுக்கு வரி - sri lankan tamil news today


இதுவரையில் கவனிக்கப்படாத 14 துறைகளில் இருந்து வரி அறவீடு செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், வரிகள் தொடர்பில் இவ்வாறு விசேட கவனம் செலுத்தப்படுவது தற்போது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார் .

அமைச்சர் குறிப்பிட்டுள்ள வரி கவனிக்கப்படாத 14 துறைகளில் பெரிய அளவிலான தனியார் வகுப்புகள், தனியார் பாடசாலைகள் , தனியார் மருத்துவ சேவைகளை வழங்குதல், பொறியியல் சேவைகள் மற்றும் கணக்கெடுப்பு சேவைகள் ஆகியவை உள்ளடங்குகிறதாக தெரிவிக்கப்படுகிறது .

சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபடுவோர் வரி செலுத்த பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதாகவும், அந்த 14 துறைகளில் பதிவு செய்யப்பட்ட அனைவரின் வருமானம் குறித்தும் உள்ளூர் வருமான வரித்துறை தெளிவான விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார் .




sri lankan tamil news today

No comments:

Post a Comment