🔴இலங்கையில் இளைஞர்களிடம் எயிட்ஸ் அதிகரிப்பு , காரணம் வெளியானது - sri lankan tamil news today


ஒவ்வொரு ஆண்டும் பாலியல் ரீதியான நோய்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத்திட்டம்  சுட்டிக்காட்டுகிறது.


2022 இல் கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 604 ஆக இருந்தது, 2023 இவ்வெண்ணிக்கை  690 ஆக அதிகரித்துள்ளது.  இது பதினைந்து வீத அதிகரிப்பு என எஸ்.டி.டி மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஜனக வேரகொட தெரிவித்தார்.


இந்த நோய்கள் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும், பதிவாகும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 29 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்றும் மருத்துவர் கூறினார்.

பாதுகாப்பற்ற உடலுறவின் போது கருத்தடைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் தயக்கம் காட்டுவது இவ்வாறான நோயாளர்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும் சிலர் போதைப்பொருளைப் பயன்படுத்தி குழுக்களாகப் பாலுறவில் ஈடுபடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்  பால்வினை நோய்கள் அதிகமாகப் பரவக்கூடும் என்றும் வைத்திய நிபுணர் மேலும் கூறியுள்ளார் .


sri lankan tamil news today

No comments:

Post a Comment