🔴ஒன்லைன் பாலியல் வியாபாரம் செய்த இலங்கை ஜோடி கைது - sri lankan tamil news today


பாலியல் காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போது, ​​கொள்ளுப்பிட்டியில் முன்னர் வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் பிலியந்தலை வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் சோதனையின் போது, ​​மற்றொரு ஜோடியும் இருந்ததாகவும் , அவர்களும் குறித்த  மோசடியில் நேரடியாக ஈடுபட்டள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது .

22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இந்த இரு ஜோடிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment