🔴முழுமையாக வெள்ளத்தை தடுக்க கொலன்னாவைக்கு புதிய திட்டம்


கொலன்னாவை நகரை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதே பகுதியில் உயரமான இடத்திற்கு மாற்றி அமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய நகர திட்டத்தின் கீழ், தற்போது தாழ்வான பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்றவை முதலில் உயரமான பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.

குறித்த விடயங்களை அமைக்க கொலன்னாவை  பகுதியிலே பொருத்தமான நிலப்பகுதிகள் இருப்பதாக அரசு கூறுகிறது.  அத்துடன், கொலன்னாவையின் புதிய நகரத் திட்டத்தின் பிரகாரம், அனுமதியற்ற கட்டுமான தடுப்பு சட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

இத்திட்டத்தின் பிரகாரம் களனி கங்கை பள்ளத்தாக்கில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பும் தயாரிக்கப்பட உள்ளது

No comments:

Post a Comment