🔴மோசமான காலநிலை , தற்போதைய நிலை தொடர்பான அப்டேட்


இன்று மாலை மற்றும் இரவு வேளையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் நாட்டில் ஏனைய சில இடங்களில்  மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது .

இதேவேளை, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்பான தற்போதைய  முக்கிய விடயங்கள் பின்வருமாறு

சீரற்ற காலநிலை காரணமாக 40,728 குடும்பங்களைச் சேர்ந்த 159,991 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மோசமான காலநிலையினால் 13 மாவட்டங்களில் மொத்தம் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த இறப்புக்களில் ஐந்து பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் 03 பேர் கொழும்பில், 06 பேர் மாத்தறையில், 02 பேர் காலியில், ஒருவர் கம்பஹாவில் இருந்தும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .


களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை நிலவரப்படி, 1,795 குடும்பங்களைச் சேர்ந்த 8,180 பேர் 122 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் சில பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வள்ங்கப்பட்டுள்ளது .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment