🔴சஜித் பேசும் வார்த்தைகளில் அவதானமாக இருக்காவிடின் ரணில் முன்னிலை பெறுவார் - கம்மன்பில -sri lankan tamil news today


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்களில் தற்போது 3வது இடத்தில் இருப்பதாகவும், தனது இடத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


அவர் இப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார், அந்த இடத்தில் இருந்து முன்னேற முடிந்த அனைத்தையும் முயற்சிகளையும் செய்கிறார்.  காணி உறுதிகள் வீடுகளும் விநியோகிக்கப்படுகின்றன, ஊதியங்கள் அதிகரிக்கப்படுகின்றன, சலுகைகள் வழங்கப்படுகின்றன . மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெல்வதற்கும், ராஜபக்சக்களை அரசாங்கத்தில் இருந்து அகற்றுவதற்கும் அவர்கள் முயற்சித்து வருகின்றார் ” என வெள்ளிக்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் குறியிட்டுள்ளார் .

இவை அனைத்தையும் செய்து ஜூலை மாதம் நிலவரத்தை மதிப்பீடு செய்ய சர்வே நடத்தப்படும் என்றும், அப்போதும் 3வது இடத்தில் இருந்தால், மோசமான முடிவுகளுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பாததால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்  என்றும் அவர் கூறியுள்ளார் .

முன்னணி வேட்பாளராக இருக்கும்  சஜித் பிரேமதாச , அவர் பேசும் வார்த்தைகளில் அவதானமாக இருக்கவிட்டால், அவர் முதலாம் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு வீழ்ந்து ரணில்  முன்னிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார் .



sri lankan tamil news today

No comments:

Post a Comment