🔴ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதியை குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ


இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் எப்போதும் நடைபெறும் யார் யார் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது .

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் நடைபெறுமா என்பது பலரினதும் கேள்வியாக மாறியுள்ள நிலையில் , இதற்கு ஜனாதிபதியின் நெருங்கிய அமைச்சரான ஹரின் பெர்னாண்டோ இன்று பதில் வழங்கியுள்ளார் .

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடம் கண்டிப்பாக நடைபெறும் என்றும் . இத்தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் 5ம் திகதி நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

குறித்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்றும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார் . 

No comments:

Post a Comment