🔴லேப்டாப் வெடித்ததில் பாகிஸ்தானில் 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு - sri lankan tamil news today

பாகிஸ்தான் வீடு ஒன்றில் லேப்டாப் கம்ப்யூட்டர் வெடித்து சிதறியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர் .  அவர்கள் 6 வயது  மற்றும் 9 வயது சிறுவர்கள் ஆவர் .

இந்த விபத்தில் 03 வயதுக்கும் 09 வயதுக்கும் இடைப்பட்ட 05 சிறுவர்கள் உள்ளடங்களாக 09 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மடிக்கணினி மின்கலம் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சில சமயங்களில் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள பழுதடைந்த மின்கலங்கள் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கும் எனவும், சில சமயங்களில் அவை வெடித்துச் சிதறக்கூடும் எனவும் சம்பவம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்கள் தெரிவிக்கின்றனர். 


sri lankan tamil news today

No comments:

Post a Comment