🔴திரிபோஷாவுக்கு மீண்டும் அனுமதி


திரிபோஷ உற்பத்திக்கு சுகாதார அமைச்சு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறார்களுக்கு நிபந்தனைகளுடன் மீண்டும் த்ரிபோஷா பயன்படுத்த அனுமதிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, லங்கா திரிபோஷ நிறுவனம், திரிபோஷாவிற்குப் பதிலாக அரிசியில் இருந்து புதிய வகை போஷாக்கு கொண்ட உற்பத்தியை செய்ய கவனம் செலுத்தியுள்ளது.

திரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் அதிகளவு காணப்படுவதால் 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment