🔴பக்கத்து வீட்டில் இருந்து மின்சார பெற்றுக்கொள்ள முயன்ற போது மின்தாக்கி ஒருவர் உயிரிழப்பு


வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக அயல் வீட்டில் மின்சாரம் பெறச் சென்றவர் இன்று (24) மாலை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும கும்புரேகொட ஹபரகட தோவலம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அந்த வீட்டை ஒட்டிய வீட்டில் இருந்து மின்கம்பியை இழுத்து மின்சாரம் எடுப்பதற்காக கம்பியை பொருத்தும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் .

முதலில் அவரை நெலுவ மெதகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாளை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளது.






Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment