🔴இந்திய அணியின் ஹெட் கோச் பதவிக்கு இலங்கை முன்னாள் பிரபலம் ?


20-20 உலக கிண்ண இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் , கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது அதிகம் பேசப்படும் செய்தியாக  இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் யார் என்பது மாறியுள்ளது .


முன்னாள் இந்திய அணி தலைவர் ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணிக்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார் . ஆனால் அவரது ஒப்பந்தம் விரைவில் முடிவடைவதால் அவரை தொடர்ந்தும் அப்பதவியில் தக்கவைக்க இந்திய கிரிக்கெட் கவுன்சில் முயற்சிகளை செய்யவில்லை.

பிசிசிஐ முதலில் கவுதம் கம்பீர் மீது தமது பார்வையை  செலுத்தியது, ஆனால் தற்போது அவர்களின் கவனம் மாஸ்டர் மைண்ட் என அழைக்கப்படும் இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்தனா மீது விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மஹேல ஜெயவர்த்தன தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றி வருவதுடன், இலங்கை அணியின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார் .

மஹேலவை தவிர ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கரின் பெயரும் இந்த வரிசையில் இந்தியா அவதானித்து வருகின்றது .

மஹேல ஜயவர்தன இந்திய பயிற்றுவிப்பாளர் பதவிக்கு  விண்ணப்பிக்காத போதிலும் அவரை இணைத்துக்கொள்ள பிசிசிஐ  கவனம் செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .







Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment