🔴நடக்க கூடாதது நடந்து விட்டது

பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் அன்றைய தினம் நடக்க கூடாத செயல் ஒன்று இடம்பெற்றதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திரு.பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு வந்து வாக்குமூலம் ஒன்றை வழங்கிய போது, ​​அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இ.அமைச்சரினால்  தாக்கப்பட்ட விமான நிலைய போர்ட்டர் இன்னும் பணிக்கு திரும்பவில்லை, அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது  குறித்து அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ​​​​அந்த நபர் ஒரு அப்பாவி , அந்த மனிதன் கண்டிப்பாக மீண்டும் பணிக்கு வர வேண்டும்.  வாழ்வதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லையே என்றும் அமைச்சர் கூறியுள்ளார் .

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறைந்தது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று (17) காலை அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.








Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment