🔴அண்மைக்காலமாக விவாகரத்து வீதத்தில் அதிகரிப்பு


புதிதாக திருமணமானவர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டிலிருந்து  ஒரு அதிகரிப்பை காண்பிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, ​​அண்மைக்காலமாக திருமணம் செய்துகொள்பவர்கள்  இரண்டு முதல் மூன்று வருட குறுகிய காலத்தில் விவாகரத்து செய்யும் நிலை காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுத் திணைக்கள சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் தெரிவித்துள்ளார் .

குறிப்பாக வெறுப்பு , விட்டு செல்லல் இந்த விவாகரத்துக்கான முக்கிய காரணமாக காணப்படுவதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment