🅾️உலகின் மிகச்சிறந்த வீரருக்கான விருது மெஸ்ஸிக்கு


பிபாவினால் (FIFA) வருடாந்தம் நடத்தப்படும் "பிபா தி பெஸ்ட்" உதைபந்தாட்ட விருது வழங்கும் விழா நேற்று (15) லண்டன் நகரில் நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு இதுவாகும் .

இந்த நிகழ்வில் 2023ம் வருடந்திற்கான உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை ஆர்ஜென்டினாவின் லியோனால் மெஸ்ஸி வெற்றி கொண்டார் .

மெஸ்ஸி இந்த விருதை வெல்லும் 3வது முறை இது என்பது விஷேட அம்சமாகும்.

No comments:

Post a Comment