🔴நாரம்மல சம்பவத்தை அடுத்து பொலிஸிக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்

பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் இருக்கும் பொழுது வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என செயல் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18ம் திகதி நாரம்மல சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனத்தை நிறுத்தாமல் சென்ற சாரதி மீது தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்,  சாரதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment