🅾️பழைய தெரிவுக்குழுவுக்கு மதீவ்ஸ் பதிலடி


கடந்த கடந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தும் என்னை ஒருநாள் உலகக்கிண்ண மற்றும்  டி20 போட்டிகளுக்கு தெரிவு செய்யவில்லை . இது ஏன் என எனக்கு தெரியவில்லை என நேற்று அஞ்சேலோ மதீவ்ஸ் தெரிவித்துள்ளார் .


ஒரு கிரிக்கெட் வீரராக எமக்கு சில விடயங்களை ஊடகங்களுக்கு முன் தெரிவிக்க முடியாது இருப்பினும் கடந்த சில வருடங்களில் நடந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் .

தெரிவிக் குழுவாக இருக்கலாம் அல்லது ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதால் அவர்கள் எந்த ஒரு குறுகிய நோக்கங்கள் இன்றி அணிக்காக மாத்திரம் செயற்படும் பொழுது , அணியை ஒரு பக்கம் எடுத்துச் செல்ல முடியும் . இருப்பினும்  சில குறுகிய நோக்கங்களுக்காக செயல்படும் பொழுது பிரச்சினைகள் உருவாகிறது .


இலங்கை அணி தற்போது இருக்கும் இந்த நிலைமைக்கு நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் . மீண்டும் ஒரு சிறப்பான அணியை உருவாக்கி , அதனை கொண்டு நாம் இழந்த கிரிக்கெட் மதிப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என மதீவ்ஸ் நேற்றைய T20 வெற்றியின்  பின்பு நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment