இலங்கை கிரிக்கெட் அடுத்து என்ன ? அதிரடி மாற்றங்கள்

 


வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இலங்கை கிரிக்கெட் தொடர்களில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் , சென்ற மாதம் இலங்கை கிரிக்கெட் சபை தற்காலிகமாக சர்வதேச கிரிக்கெட் சபையினால் தடை செய்யப்பட்டது .

 

இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் பாரிய விரக்தி எழுந்தது . பல போராட்டங்கள் இலங்கை கிரிக்கெட் சபை முன்பே இடம் பெற்றது .தொடர்ந்தும் பல சர்ச்சைகள் தொடர , பாராளுமன்றம் வரை இதன் விவாதங்கள் சென்றன .

 

 கிரிக்கெட் என்பது இலங்கை அரசியலில் கூட ஆட்டங்களை ஏற்படுத்தும் ஒரு துறையாகும் . இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கும் இடையில்  விரிசல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் விளையாட்டு துறை அமைச்சர் , பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டு புதிய விளையாட்டு துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டார் .

 

அவரின் நியமனத்தை தொடர்ந்து புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம் செய்யப்பட்டது .

 

ஆஸ்திரேலியா இந்தியாவை போன்று அண்மையில் ஓய்வு பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொண்டு குறித்த கிரிக்கெட் தெரிவிக்குழு அமைக்கப்பட்டது . இதன் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டார் .

 

தற்போது இலங்கையின் முன்னணி வீரர்களை கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து பயிற்றுவிப்பு பொறுப்புகளிலும் அமர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது . இதில் முன்னணி வீரர்களான டில்ஷான் , ஹெராத் , குலசேகர மற்றும் அவிஷக பெர்னாண்டோ ஆகியோரின் பெயர்கள் முணுமுணுக்கப்படுகிறது .

 

தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்புக்களிலும் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

 

அதன்படி ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் , டெஸ்ட் அணி தலைவராக தனஞ்ய டி சில்வா மற்றும் டீ20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

 

இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் மத்தியில் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை ஜிம்பாப்வே அணியுடன் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட உள்ளது .

No comments:

Post a Comment