ராஜா ராஜா சோழன் யார் ?


 

சங்ககாலத்தில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் ஆட்சி கிபி மூன்றாம் நூற்றாண்டிற்கு பின்பு கலப்பிரியர்கள் வருகையால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது . சோழர்கள் யார் ? ராஜா ராஜா சோழன் யார் ? என்ற கேள்வி பலரிடமும் உள்ளது . ராஜா ராஜா சோழன் யார் ? அவர் என்னவெல்லாம் செய்தார் என்று பார்ப்போம் .


 

 கிட்டத்தட்ட 300 வருடங்கள் ஆட்சி இல்லாத சோழர்களின் வரலாற்றை விதலாய சோழன் கிபி ஏழாம் நூற்றாண்டில் மீட்டெடுத்தான் .அவரைத் தொடர்ந்து ஆதித்த சோழன், முதலாம் பராந்தகன் , கண்டராதித்தன் ஆகியோர் சோழ அரசர்களாக முடி சூட்டப்பட்டனர். ஆதித்தன் மறைவுக்கு பின்னால் அவருடைய மகன் உத்தமசோழன் பதவி ஏற்றி இருக்க வேண்டும் ,ஆனால் அவர் சிறுவனாக இருந்ததால் கண்டறாதித்தன் சகோதரன் மகனான சுந்தர சோழர் மன்னனாக முடிசூட்டப்பட்டார்.


 

சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழிவர்மன் என்ற இருவர்  ராஜா ராஜா சோழன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் மறுவனவர்களால் படுகொலை செய்யப்பட்டார் .இந்த துயரத்திலேயே சுந்தர சோழன் காலமானார் .அதன் பிறகு கண்டறாத தன் மகனான உத்தமத்துடன் ஆட்சிக்கு வந்தார். இருந்தாலும் ஆதித்த கரிகாலன் மறைவு மர்மமாகவே இருந்தது.



 காலங்கள் உருண்ட ஓடின .கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து ஆதித்த கரிகாலனை ஆட்களை வைத்து கொலை செய்ததே உத்தமசோழன் தான் என்று தெரியவந்தது . இதனால் உத்தமசோழனுக்கு பதிலாக ராஜராஜ சோழன் பதவி ஏற்க வேண்டும் என்று மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர் .இருந்தாலும் உத்தமசோழன் மறைவுக்கு பின்னரே ராஜா ராஜா சோழன் மன்னராக பதவி ஏற்றார் .


 

 

இவர் பதவி ஏற்கும் போது சோழநாடு என்பது வெறும் திருச்சி மற்றும் தஞ்சையின் சில பகுதிகளாகவே இருந்தது. அதன் காரணமாக முதலில் சோழ நாட்டை விரிவாக்க தேவையான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார் ராஜா ராஜா சோழன் .மற்ற மன்னர்களைப் போல போர்க்காலங்களில் மட்டும் போர்படைகளை திரட்டாமல் நிரந்தரமான தனக்கென்று தனி ராணுவத்தை கட்டமைத்தார் .



 அதுமட்டுமின்றி அனைத்து ராணுவ படைக்கும் அவரே தலைமை தாங்கினார் .இதன் விளைவாக சோழ சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய தொடங்கியது. ராஜராஜ சோழன் காலத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படும் போர் காந்தலூர் சாலை ,இந்த போருக்கு முக்கிய காரணமே சோழ தூதுவனின் ஒருவன் கைது நடவடிக்கையை  .சேரலுடன் அன்பு பாராட்டி சோழன் சேர் அவர்களின் குடகு மலைக்கு தூதுவளை தூது அனுப்பினார் .ஆனால் சேரர்கள்களோ வந்த தூதுவனை பந்த வேகத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 

 இதனால் ராஜா ராஜா சோழனின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள் சேரர்கள் .விளைவு போர் மூண்டது .சோழர்களின் படையை ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் வழிநடத்தினார். ராஜேந்திர சோழனின் படைக்கு முன்னால் சேரநாடு கால் தூசி போல் ஆகிப் போனது. இதன் விளைவாக சேரர்களின் நீலமான கேரளா சோழர்களின் வசனம் வந்தது .அதனைத் தொடர்ந்து களப்பிரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கர்நாடகாவையும் ஆந்திராவின் பல பகுதிகளையும் கைப்பற்றியது ராஜா ராஜா சோழனின் படை.


 

 அதன் பிறகு ராஜா ராஜா சோழனின் பார்வை கடல் தாண்டி இருந்த இலங்கையின் மீது விழுந்தது. இலங்கை முழுவதையும் கைப்பற்றுவதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் ராஜராஜ சோழன் , ராஜராஜ சோழனின் காத்திருப்பதற்கு பலனாக இலங்கை ஆண்டு வந்த ஐந்தாம் மகிந்த ஆட்சியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையை கைப்பற்ற தன்னுடைய பலம் வாய்ந்த கடற்படையுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டான் ராஜராஜசோழன் . இந்த முறையும் ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனை படைக்கு தலைமை தாங்கினார்.


 

இலங்கையின் அனுராதபுரம் சோழர்களின் வசம் வந்தது .ஆனால் ராஜா ராஜா  சோழனுக்கு இந்த ஒரு இடத்தை மட்டும் வெற்றி பெற்று திரும்ப மனமில்லை, இதனால் இலங்கையின் பிற பகுதிகளை ஆண்ட மன்னர்களையும் அடித்து  இலங்கையின் எட்டு திசைகளிலும் சோழர்களின்  கொடியை பறக்கவிட்டார் ராஜா ராஜா சோழன்.


 

ராஜா ராஜா  சோழனின் காலத்தின் கடைசி போராக மாலைத்தீவுகளுக்கு எதிரான போர் அமைந்தது .அந்தப் போர் கிபி 1013 ஆம் ஆண்டு நடைபெற்றது . பல்லவர்களின் காஞ்சிபுரத்தை கைப்பற்றும்போது அவர்களால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவிலை பார்த்து வியந்து போனார் ராஜராஜ சோழன். இதனால் கலையில் அதிகம் ஈடுபாடு கொண்ட ராஜ ராஜ சோழன், அனைவரும் வியக்கும் வண்ணம் தஞ்சையில் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்ட துவங்கினார் .


 

தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றி நாம் அறியாதது இல்லை .கிட்டத்தட்ட 1000 நூற்றாண்டுகளை கடந்தும் இன்று நிலைத்து நின்று சோழர்களின் சாதனையை நம் கண் முன் காட்டுகிறது இந்த கோவில். சுடுமண் உலோகம் மரம் என்று கற்கால முறைகள் எதுவும் பயன்படுத்தாமல் ,வெறும் கற்களைக் கொண்டே இந்த மாபெரும் கோயிலை கட்டி முடித்தார் ராஜராஜ சோழன் .



இந்த கோவிலுக்கான கற்கள் திருச்சியில் உள்ள மாட மலையில் இருந்தும், புதுக்கோட்டையை எடுத்த புண் ஆண்டாள் கோவில் பகுதியில் இருந்தும் கற்கள் கொண்டுவரப்பட்டன. கோவிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள பெரிய லிங்கத்தின் கல் திருவரக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.



 சுமார் இரண்டரை லட்சம் தான் கற்களின் எடையை தாங்கி எண்ணெய் ஊட்டுகின்றது தஞ்சை பெரிய கோவில் இன்று அளவிலும் கோவிலுக்கு நன்கொடைகள் கொடுப்பவர்கள் பெயர்கள் மட்டுமே கோவிலில் கல்வெட்டுகளை பொறிக்கப்படுவது வழக்கம் .ஆனால் ராஜா ராஜா  சோழனும் தலைமை சிற்பி முதல்  அந்த கோவிலுக்காக வேலை செய்த கொடைகோடி ஊழியர்கள் வரை  அனைவரின் பெயரையும் கோவில் உள்ள கோபுரத்தில் செதுக்கி வைத்து, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் பெயர்களை நிலைத்து நிற்க வைத்துள்ளான்  ராஜா ராஜா சோழன்.


 

 சோழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது என்பது ,கரிகாலன் கட்டிய கல்லணையில் இருந்தும் வீரநாராயணன் வெட்டிய வீராணம் ஏரியிலிருந்தும் நமக்கு தெரிய வருகிறது. இதுவரைக்கும் பார்த்தது சோழர்களின் பொற்காலமாக தெரிந்தாலும் சோழர்களின் அகண்ட நிலப்பரப்பு கோவில்கள் கட்டுவது ,நீர்நிலைகளை பராமரிப்பு, ராணுவ பராமரிப்பு என்று அனைத்துக்கும்  மக்களிடம் இருந்து அதிகபடியான வரி வசூல் செய்யபட்டுள்ளது . வரி கட்ட மறுப்பவர்கள் பலவிதமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


 

 இந்த குற்றச்சாட்டுகள் மட்டும் இன்றி ஜாதிகள் ரீதியான குற்றச்சாட்டும் இராஜராஜ சோழனின் மீது கூறப்படுகிறது. ராஜா ராஜா சோழன் மறைவுக்கு பின்னால் சோழ வம்சம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது. ஒரு சில நூற்றாண்டிகளிலேயே சோழ வம்சம் இருந்த இடம் தெரியாமல் போனது .ஆனால் தஞ்சை பெருவுடையார் கோயிலும் அதனை கட்டிய ராஜா ராஜா சோழன் புகழும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்று நிலைத்திருக்கிறது. ராஜா ராஜா .


 

ராஜா ராஜா சோழன் யார் என்பதை தற்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் .ராஜா ராஜா  சோழனின் இந்த வரலாற்றை பற்றி நீங்க என்ன  நினைக்கிறீர்கள் .

No comments:

Post a Comment